Posts

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

Image
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளையும் (வியாழக்கிழமை) 6 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 15 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35 சதவீதமாகவும் இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்கள் இடியுடன் கூடிய கோடை மழை எதிர்பார்க்கப்படுகிறது.  கால்நடைகளை மரங்களுக்கு அடியில் அல்லது மின் கம்பங்கள் மற்றும் மின் இணைப்புகள் உள்ள இடங்களுக்கு அருகில் அல்லது கம்பி வேலியின் அருகில் கட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் கால்நடைகளை மழை பெய்யும் போது மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. கால்நடைகளுக்க...

நாமக்கல் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 30 மருத்துவர்கள் நியமனம்

Image
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலை இருந்தது. இதனால் அரசு அனுமதியின் பேரில், தற்காலிக மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானது.  இதன்படி, நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் மற்றும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைகளில் நேர்காணல் நடந்தது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நேர்காணலில், கொரோனா தொற்று தடுப்பு சிகிச்சை பணிகளுக்காக 30 மருத்துவர்கள், 22 செவிலியர்கள், 25 பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அவர்கள் உடனே பணியில் சேர்வார்கள் என்று அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Image
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்  நாமக்கல் மாவட்டத்தில் 2017-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மெகராஜ் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்க தவறிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பதிவுதாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்து கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த சலுகையை பெற விரும்பும் பதிவுதாரர்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளான 28.5.2021 முதல் மூன்று மாதங்களுக்குள், அதாவது வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் பதிவினை புதுப்பித்து கொள்ளலாம். ஆகஸ்டு 27-ந் தேதி கடைசிநாள் ஆன்லைன் மூலமாக புதுப்பிக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி வரை பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம...

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைப்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

Image
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள், பெண்களுக்கு உதவ 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.   இந்த குழுவில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூகநல அலுவலர், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர், ஆட்சியரால் பரிந்துரை செய்யப்பட்ட குழந்தைகள் இல்லத்தை நடத்துபர்கள் என 7 பேர் அடங்குவர். இக்குழுவினர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோரை கண்காணித்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ உதவிகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை எடுப்பர். எனவே, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகள், கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற ...

நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளை கண்காணிக்க வணிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு

Image
நாமக்கல் மாவட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விலைகளை கண்காணிக்க வணிகர் சங்கம் சார்பில் கண்காணிப்பு குழு பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்களும் வெளியீடு தமிழ்நாட்டில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு தளர்வில்லா ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் தடையில்லாமல் பாதுகாப்புடன் வீடு தேடி வந்துசேர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இப்பொருட்கள் தடையின்றியும், சரியான விலையிலும் கிடைக்கிறதா என்பதை அறிய தமிழ்நாடு முழுக்க மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக அமைக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை தந்து வருகின்றனர்.  பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் வணிகர் சங்க பிரதிநிதிகளான  ஜெயகுமார் வெள்ளையன்   98437 98438 பொன்.வீரக்குமார் -94431 59359 N.P.கிருஷ்ணன் -91590 25307 சேந்தை க...

நாமக்கல் நகர காய்கறி வியாபாரிகள் சங்கம் மற்றும் நாமக்கல் கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் சார்பில் காவலர் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு

Image
நாமக்கல் காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள 270 காவலர் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில், நாமக்கல் நகர காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் மனோகரன் மற்றும் நாமக்கல் கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் நிறுவனத்தினர் இணைந்து இலவச காய்கறி தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுஜாதா, கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார், துணை கண்காணிப்பாளர் காந்தி, நாமக்கல் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் காவலர்களுக்கு காய்கறி தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்ட செயலாளர் வீரக்குமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், காய்கறி வியாபாரிகள் சங்க பொருளாளர் ராஜசேகர், செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிப்பு

Image
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து கடந்த 6 நாட்களில் ரூ.15 லட்சத்து 82 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், 1,956 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து  போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே வாகன சோதனையின் போது ஊரடங்கை மீறும் நபர்கள் மற்றும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வெளியே சுற்றும் நபர்களிடம் இருந்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை, அதாவது கடந்த 6 நாட்களில் முககவசம் அணியாத 4,115 பேர்களிடம் இருந்து ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இ...