கால்நடை வளர்ப்போருக்கு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
நடமாடும் சிறப்பு கால்நடை மருத்துவ குழுக்கள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்குத் தேவையான சினை ஊசி மற்றும் அவசர சிகிச்சை வழங்குவதற்காக நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை நாமக்கல் ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு ஆகிய மூன்று இடங்களில் சிறப்பு நடமாடும் கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி மற்றும் சேந்தமங்கலம் வட்டார கால்நடை வளர்ப்போர் 9445032640 என்ற அலைபேசி எண்ணிலும் நாமகிரிப்பேட்டை வெண்ணந்தூர் ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் வட்டார கால்நடை வளர்ப்போர் 9445032680 என்ற தொலைபேசி எண்ணிலும் திருச்செங்கோடு கபிலர்மலை பரமத்தி எலச்சிபாளையம் மல்லசமுத்திரம் மற்றும் பள்ளிபாளையம் வட்டார கால்நடை வளர்ப்போர் 94450332641என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த சேவை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனவே கால்நடை வளர்ப்பும் இதன் மூலம் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
24 மணி நேர தேவைக்கு நாமக்கல் மாவட்ட கால்நடை வளர்ப்போர் அனைவரும் 1962 என்ற அம்மா ஆம்புலன்ஸ் என்னை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு மெகராஜ்
அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகவே பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இந்த ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியை சரியான முறையில் கடைபிடித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சார்பில் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment