இன்று நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற நடுத்தர மற்றும் பெரிய ஜவுளிக் கடைகளின் உரிமையாளர்கள் கூட்டத்தில் அனைத்து கடைகளின் திறக்க மாவட்ட ஆட்சியர் திரு.மெகராஜ் அவர்கள் உத்தரவிட்டார் நாமக்கல் & இராசிபுரம் தாலுகா (கடைகள் திறக்க அனுமதிக்கப்படாத) நடுத்தர மற்றும் பெரிய ஜவுளி கடை உரிமையாளர்களின் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆலோசனைப்படி, மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் தலைமையில், மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 20/05/2020 காலை 11 மணியளவில் நடைபெற்றது. கூட்டத்தில், நாளை (21/05/2020) முதல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளையும், குளிசாதன வசதி செய்யாமல், 50% பணியாளர்களை கொண்டு, தரைத்தளம் மற்றும் முதல் தளம் ஆகியவற்றை மட்டும் திறந்து, காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை வணிகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி திறக்கப்படும் அனைத்து ஜவுளி கடைகளும் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள விதிமுறைகளையும், பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி நடக்க வேண்டும் என அறிவுற...
Comments
Post a Comment