இந்த ஊரடங்கு காலத்தில் என்னென்ன இயங்கும்? எந்தெந்த சேவைகள் கிடைக்காது? மத்திய அரசு புது அறிவிப்பு

என்னென்ன இயங்கும் ? எந்தெந்த சேவைகள் கிடைக்காது ? மத்திய அரசு புது அறிவிப்பு

மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.



1. பேருந்து, ரயில், விமான சேவைகள் இயங்காது


2. அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது

3. மாநிலங்களுக்கிடையே , மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

4. சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து , பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடாது

5. ஆட்டோ உள்ளிட்ட டாக்சி சேவைகள் இயங்கக்கூடாது

6. மால்கள், தியேட்டர்கள், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, பார்கள் , மண்டபங்கள் மூடப்பட வேண்டும்

7. விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது

8. வழிபாடு தலங்கள் அனைத்திலும் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது

9. இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது.

ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை

1. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி

2. கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை.

3. விவசாய உபகரணங்கள், உரங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படலாம்

4. விவசாயப் பொருள் போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறுவதை மாநில அரசுகள் உறுதி செய வேண்டும்

5. மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி

6. தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்

7. பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்

8. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்

9. கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்

10. அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை

11. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி

12. 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்

13. ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்

14. ஊரகப் பகுதியில் சிறு , குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்

15. லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி

16. நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி

17. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை

18. கூரியர் சேவைகளுக்கு அனுமதி

19. பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்

20. 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது

21. பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்

22. எலக்ட்ரீசியன், பிளம்பர்,  மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள் பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்.

23. அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன்  இயங்கலாம்.

ஏப்ரல் 20க்கு பிற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Comments