கொரோனா-வால் நாமக்கல்லில் தொழிற்சாலை மூடப்பட்டது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தொழிற்சாலை இன்று மூடப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டது.



நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வரலட்சுமி தொழிற்சாலையில் இன்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்நிறுவனம் இன்று மூடி தனிமைப் படுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து இயந்திரங்களைப் பழுது நீக்குவதற்காக வந்த நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்களைத் தனிமைப்படுத்தி மேலும் தொழிற்சாலை மூடப்பட்டது.

மேலும் கொரோனா நோய் பாதித்த நான்கு நபர்கள் பணியாற்றிய பிரிவில் பணிபுரிந்த 28 நபர்களையும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி வெற்றி விகாஸ் பள்ளியில் கண்காணித்து வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு