நாமக்கல் மாவட்ட ரேசன் கடைகளுக்கு தேவையான 2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயிலில் வரவழைப்பு
2,600 டன் ரேஷன் அரிசி சரக்கு ரயிலில் வரவழைப்பு
நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான, 2,600 டன் ரேஷன் அரிசி ஆந்திராவில் இருந்து வரழைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, ஆந்திரா, தெலுங்கானா, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும். அந்த வகையில் ஆந்திரா மாநிலத்திலிருந்து, 2,600 டன் அரிசி, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் வரவழைக்கப்பட்டது.
அரிசி மூட்டைகள், 120 லாரிகளில் ஏற்றப்பட்டு, இந்திய உணவுப்பொருள் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டன.
Comments
Post a Comment