முதலமைச்சருக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் திரு. நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்

முழு ஊரடங்கால் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.


எனவே புதிய அரசு கீழ்காணும் அவசிய தேவைகளை உடனே நிறைவேற்றி தரவேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

1) அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவச உணவு அளிக்க வேண்டும்.

2) ரேஷன் கடையில் 2000 ரூபாய் போதாது.
ஸ்டாலின் அவர்கள் எடப்பாடியை பார்த்து ரேசனில் 5000 கொடுக்க வேண்டும் என்று ஊர் ஊராக மக்களிடம் கிராம சபை பிரச்சாரம் செய்தார்.
அந்த 5000 ரூபாயை இப்பொழுது முதலைமைச்சர் ஸ்டாலின் கொடுக்க வேண்டும்.

3) அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிடத்தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், சமையல் கலைஞர்கள், திரைத்துறை,சின்னத்திரை தொழிலாளர்கள், திருமண புகைப்பட கலைஞர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து பிரிவு தொழிலாளர்கள் அனைவருக்கும் உடனடியாக 5000 ரூபாய் உதவி தொகை வழங்க வேண்டும்.

4) அனைத்து திருமண மண்டபங்களுக்கும் சொத்துவரி கொரோணா காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும்.

5) அனைத்து வீடுகளுக்கும் மின்சார கட்டணம் ரத்து செய்ய வேண்டும்.

6) அனைத்துவிதமான வங்கி கடன் தவனைகளை கொரோணா காலத்தில் ரத்து செய்து அதை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்

7)நீங்கள் எதிர் கட்சியாக இருக்கும்போது கொரோணவால் இறந்தவர்களுக்கு 1 கோடி கொடுக்க வேண்டும் என்கிறீர்கள்.
இப்பொழுது 50 லட்சமாவது தரவேண்டும்.

8)கொரோணா முடியும் வரை. ரேஷன் கடையில் சர்க்கரை, சமையல் எண்ணெய்,பருப்பும் உள்ளிட்ட சமையல் பொருட்கள் இலவசமாக கொடுக்க வேண்டும்.

9) அனைத்து ரேஷன் கடைகளிலும் மாஸ்க் மற்றும் சனிடைசர் இலவசமாக கொடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது