நாமக்கல் உள்பட 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 தபால் வாக்குகள் செல்லாதவை; ராசிபுரத்தில் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டன


தமிழக சட்டசபை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் 4 ஆயிரத்து 872 தபால் வாக்குகள் பதிவாகி இருந்தன. இவற்றில் 188 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அதிகாரிகளால் 

நிராகரிக்கப்பட்டது.இதேபோல் சேந்தமங்கலம் தொகுதியில் 2 ஆயிரத்து 210 தபால் வாக்குகள் பதிவாகின. இவற்றில் 595 செல்லாத வாக்குகள் நிராகரிக்கப்பட்டது. திருச்செங்கோடு தொகுதியில் 2 ஆயிரத்து 760 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் 209 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. 

பரமத்திவேலூர் தொகுதியில் 3 ஆயிரத்து 944 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் 168 வாக்குகள் செல்லாத வாக்குகளாக நிராகரிக்கப்பட்டன. 

குமாரபாளையம் தொகுதியில் 1,374 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 87 வாக்குகள் செல்லாத வாக்குகளாக நிராகரிக்கப்பட்டன. மொத்தமாக 5 சட்டசபை தொகுதிகளில் 1,247 வாக்குகள் செல்லாத வாக்குகள் என அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டன.ராசிபுரம் தொகுதியில் மொத்தம் பதிவான தபால் வாக்குகள் 3,251 ஆகும். இந்த தொகுதியில் மட்டும் அனைத்து தபால் வாக்குகளும் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது