வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இருப்பினும் ஆகம முறைப்படி சாமிக்கு தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை.

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் மற்றும் நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சிலர், கோவிலுக்கு வெளியே நின்று சாமியை தரிசனம் செய்து செல்வதை பார்க்க முடிந்தது.

Comments

Popular posts from this blog

நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோணா பாதித்த தன் ரசிகருக்கு ஆறுதல் தெரிவித்த நடிகர் சிம்பு

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகளையும் திறக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு