வீசப்பட்ட விதைப்பந்துகளால் விளைந்த நன்மை

நாமக்கல் மாவட்டம் ராசாம்பாளையம் பகுதி அடுத்த சர்வ மலைப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட காட்டுத் தீயினால் பெருமளவு காட்டு மரங்கள் அதில் எரிந்து கருகி நாசம் ஆகினர்.



இந்நிலையில் அப்பகுதியில் களப்பணி மேற்கொண்ட மேற்கொண்டு புதிய மரங்களை நடுதல் மற்றும் நடப்பட்ட மரங்கள் பராமரித்தல் போன்ற சமூக சேவை பணிகளில் ஈடுபட்டுவரும் பட்டிக்காட்டு பசுமை பட்டறை எனும் சமூக சேவை குழுவின் மொத்த உழைப்பும் ஒரு சிலரின் அஜாக்கிரதையால் அன்று காட்டு தீக்கிரையாகி நெருப்பில் கருகின.




இருப்பினும்கடின உழைப்பிற்கு என்றுமே சரியான பலன் உள்ளது என்பதை நிரூபிக்கும் விதமாக காட்டு தீ கட்டுக்குள் கொண்டு வரபட்டு அடுத்த சில வாரங்களில்  அப்பகுதியில் அக்குழுவின் சார்பில் விதைப்பந்துகள் காட்டுத்தீ ஏற்பட்ட இடங்களில் முழுவதுமாக வீசப்பட்டது.


இந்த நிலையில் இவர்களின் கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களாக நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இந்நிலையில் இப்பகுதியில் தூவப்பட்ட விதைப்பந்துகள் தற்பொழுது துளிர்விட்டு வளர ஆரம்பித்துள்ளது.


இந்நிலையில் இப்பகுதி மீண்டும் சோலை போன்ற அழகான காடு உருவாவதில் எந்த சந்தேகமும் இல்லை.

Comments

Popular posts from this blog

திருச்செங்கோடு அண்ணா போக்குவரத்து தொழிலாளர் நல சங்கம் சார்பில் இன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி ; முதல் நாளில் 6,683 பேர் செலுத்தி கொண்டனர்

அரசு மருத்துவமனைக்கு 7 டன் ஆக்சிஜன் நாமக்கல் MLA ராமலிங்கம் ஏற்பாடு